திருச்சி,ஏப்.18: திருச்சி அருகே தண்டவாளத்தில் கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்டிஓ விசாகணை நடத்தி வருகிறார். திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி காயத்ரி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், காய்த்ரி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, காயத்ரியின் பெற்றோருக்கு மாரிமுத்து போனில் பேசினார். அப்போது காயத்ரியை காணவில்லை எனக்கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து, சில மணி நேரத்தில், காயத்ரி இனாம்குளத்தூர் பகுதியில் ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயத்ரியின் பெற்றோர் திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், மாரிமுத்துவின் பெற்றோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அதனால் மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஆர்டிஒ விசாரணையும் நடந்து வருகிறது