திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 25 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 23 பேர், இலங்கையைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 25 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்க கோரி 25 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.