சென்னை: நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களிடையே கமல்ஹாசன் பேசியதாவது: தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை. என்னால் ஆன உதவிகளையும் செய்வேன் என்றார்.