சென்னை: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், இன்று தாயகத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. மதிமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், இன்று (9ம் தேதி) காலை 10 மணிக்கும், நிர்வாகக் குழு கூட்டம் நாளை (10ம் தேதி) காலை 10 மணிக்கும், சென்னை தாயகத்தில் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த கூட்டங்களுக்கு மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமை வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இன்று மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: கட்சி தலைமை அறிவிப்பு
previous post