சென்னை: சென்னை சென்ட்ரலில் உள்ள ஆர்பிஎஃப் ஆயுத வைப்பறையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆர்பிஎஃப் வீரர் காயமடைந்துள்ளார். தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே ஆர்பிஎஃப் ஆயுதங்கள் வைப்பறை உள்ளது. துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் காயமடைந்த வீரர், ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.