Tuesday, May 21, 2024
Home » திருவொற்றியூரில் பயங்கரம்; வாலிபர் குத்திக் கொலை: 3 பேர் கைது

திருவொற்றியூரில் பயங்கரம்; வாலிபர் குத்திக் கொலை: 3 பேர் கைது

by Suresh

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 பேரை கைது செய்தனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்தவர் சோபன்குமார்(27). இவர் புறா வளர்த்து வந்துள்ளார். தற்போது சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்தார். நேற்று திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நடைபெற்ற ஐயப்ப பூஜையில் கலந்துகொள்வதற்காக திருவொற்றியூர் கே.சி.பி சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் சோபனின் நண்பர் பிரசாத் குடிபோதையில் வந்துள்ளார். இவர்கள் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்த காரணத்தால் அந்த பிரச்னையை பேசி இரண்டு பேரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்தநிலையில், அங்கு கிடந்த பீர்பாட்டிலை சோபன் எடுத்து பிரசாத் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த பிரசாத்தை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பிரசாத்தின் நண்பர்கள் ஜோதிபாசு (26), சுரேஷ் (23), நிர்மல்குமார் (22) ஆகியோர் கையில் பெரிய கத்தி, அரிவாள்களுடன் வந்து நண்பரை தாக்கிய சோபனை தேடியுள்ளனர். அந்த சமயத்தில், திருவொற்றியூர் மேற்கு மாடவீதி அருகில் சோபன் நிற்பதாக கிடைத்த தகவல்படி அங்கு சென்று சுற்றிவளைத்து சோபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது ஜோதிபாசு தன்னிடம் இருந்த கத்தியால் சோபன் கழுத்தில் சரமாரியாக குத்தியதில் சோபன் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரை தீர்த்துக்கட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து சோபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதன்பின்னர் ஜோதிபாசு, சுரேஷ், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்தனர். ஜோதிபாசு மீது ஏற்கனவே ஒரு கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi