சென்னை : முன்னாள் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் பாலியல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். தையூரில் உள்ள பீலாவின் பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து காவலாளியை மிரட்டிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.