திருவாரூர்: திருவாரூர் திரு.வி.க அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வந்த பணியிடை நீக்க சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் கீதா மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பணியிடை நீக்க உத்தரவு வந்துள்ளது.