திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அணியமங்கலம் கிராமத்தில் ரவுடி குபேரன் கைது செய்யப்பட்டார். ரவுடி குபேரன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 துப்பாக்கி தோட்டாக்கள், கத்தியை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரவுடி குபேரன் மீது கொலை வழக்கு, அடிதடி மற்றும் பிற குற்ற வழக்குகள் உட்பட 9 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.