திருப்பரங்குன்றம்: தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் உட்பட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 300-க்கும் மேற்பட்டோர் 16 கால் மண்டபத்திலிருந்து கார்த்திகை தீபம் ஏற்ற ஊர்வலமாக புறப்பட்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் தொடர்பாக ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.