திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.அருணாச்சலம் மீது ஆப்பக்கூடல் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்து உணவு பொட்டலங்களை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் அருணாச்சலம் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.