திருப்பூர்: திருப்பூரில் ஹூப்ளி – கொச்சுவேலி விரைவு ரயிலின் A1 பெட்டியில் ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தினர். மேலும் ரயில் நிலையம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போத்தனூர் ரயில் நிலையத்தில், ஏசி கோளாறு சரி செய்யப்பட்டு பின்பு ரயில் இயக்கப்பட்டது.