ஆந்திரா: திருப்பதி பாக்ராபேட்டை அருகே 2 கார்களில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மலையை சேர்ந்த தங்கராஜ் (45), ஆனந்த் (33), விஜயராசு (25), ராஜேஷ் (27), ராஜா (33), விக்னேஷ் (23), திருப்பதி (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் (24) என்பவரையும் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ.21 லட்சம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.