திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 14 கிராம மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். கிராம மக்கள் போக்குவரத்திற்காக சிரமப்படுவதால் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊர் மக்கள் சார்பில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.