சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக தீர்ப்பு வந்திருக்கிறது. தூத்துக்குடி மக்களின் பலநாள் போராட்டத்தின் வெற்றி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.