கடலூர்: திட்டக்குடி அருகே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். கடந்த 26ம் தேதி அடையாளம் தெரியாத நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது. தங்க ஆபரணம் செய்வதாக கூறி 100கிராம் ஏமாற்றியதாக பொற்கொல்லர் ஏழுமலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் அண்ணன் தீனதயாளன், தம்பி கார்த்திக் கைதான நிலையில் தந்தை ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார்.