* விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: ஞாயிற்றுக் கிழமை மற்றும் திங்கட் கிழமைகளில் பிங்க் வண்ணப்பூக்களால் சங்கர நாராயணனை வழிபடுவதால் தொழில், வியாபாரம் மற்றும் தன வரவிற்கான வழிகள் உண்டாகும்.
* தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வைத்தியநாத சுவாமி அல்லது மருந்தீஸ்வரர் அல்லது காரணீஸ்வரரை வழிபாடு செய்வதால் தன வரவிற்கான திட்டங்களை உருவாக்குவீர்கள். தனவரவு உண்டாகும்.
* மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை நாட்களில் சரபேஸ்வரரை அபிஷேக, அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் நற்பலன்களும் தொழில் முன்னேற்றங்களும் மற்றும் நோய் அகலுதலுக்கான வழிமுறைகளும் தனவரவும் உண்டாகும்.