டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அறிக்கைகள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறது என தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு, தரவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்த நிலையில் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. வாக்கு சதவீதம் தொடர்பான காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதம் பாரபட்சமானதாக உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது குழப்பம் ஏற்படுத்தும். சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்தும் வகையில் கடிதம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.