Saturday, July 27, 2024
Home » திருமாவளவன் வீட்டில் ஐடி ரெய்டு

திருமாவளவன் வீட்டில் ஐடி ரெய்டு

by Karthik Yash

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் கடலூர் பிரிவு வருமானவரித்துறை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவினர் திருமாவளவன் தங்கி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஒவ்வொரு அறைகளையும் சோதனை செய்தனர். திருமாவளவன் தங்கி இருக்கும் அறையை நீண்ட நேரம் சோதனை செய்தனர். அதில் எந்தவித பொருளும், பணமும் கிடைக்கவில்லை. இதனால் ஐடி அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் புறவழி பகுதியில் காரில் இருந்தவாறு திருமாவளவன் தங்கி இருந்த வீட்டிற்கு வந்து சென்றவர்களை தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். அதன் பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

* கரு.பழனியப்பன் நாளை முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு
திமுக வெளியிட்ட அறிக்கை: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன் விவரம் வருமாறு: நாளை(ஏப். 11ம் தேதி)-ஆரணி, 12ம் தேதி – தருமபுரி, 13ம் தேதி கிருஷ்ணகிரி, 14ம் தேதி – ஈரோடு, 15ம் தேதி – கரூர். இந்த தேதிகளில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குள் கலந்துபேசி, ஒன்றிணைந்து, பிரசாரம் தொகுதி வாக்காளர்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டுமென கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

* பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 10 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை அசோக் நகர், சக்கரபாணி தெருவில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் 10 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அந்த 10 கிலோ நகைக்கான ஆவணங்களை காரில் வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் கேட்டனர். அதற்கு அவர்கள், மலபார் கோல்டு நகைக்கடைக்கு சொந்தமான நகைகள் என்றும், தலைமை அலுவலகத்தில் இருந்து ஈக்காட்டு தாங்கல் பகுதியில் உள்ள கிளை அலுவலகத்திற்கு எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்களை காட்டி விட்டு நகைகளை மீட்டு செல்லுங்கள் என்று கூறி 10 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்து, சைதாப்பேட்டையில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi