சென்னை: கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகள் தொடர்ந்த ரங்கராஜன், அதனின் நேர்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், வழக்கிற்கு 50,000 வீதம் ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 வழக்குகளும் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே தொகை திருப்பி வழங்கப்படும், இல்லையெனில் அபராதமாக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.