சென்னை: கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அறநிலையத்துறை உத்தரவை ஐகோர்ட் உறுதி செய்தது. தரமற்ற பிரசாதங்கள் விற்ற ஒப்பந்ததாரருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அறநிலையத்துறை ரத்து செய்ததில் தவறு இல்லை, பிரசாதத்தை ஆய்வு செய்து தரமற்றவை என தெரியவந்த பிறகே அனுமதியை ரத்து செய்ததால் தலையிட வேண்டியதில்லை என நீதிபதி கூறினார்.