சென்னை: உலகப் பத்திரிகை சுதந்திர நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது. கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பதில் அச்சமின்றி இரவும் பகலும் செய்தியாளர்கள் பாடுபட்டனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செய்தியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து உதவிகள் அளிக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள், செய்தி ஊடகவியலாளர்கள் திராவிட மாடல் அரசால் பாதுகாக்கப்பட்டு போற்றப்படுகின்றனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.