சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும்.
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
previous post