ஐதராபாத் : ஐதராபாத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு வழக்கு தொடர்பாக கவிதாவிடம் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது.