Tuesday, May 21, 2024
Home » திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியீடு!

by Francis

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதத்துக்கான தரிசனம், ஆர்ஜித சேவா சங்க தொண்டர்களுக்கான டிக்கெட்டுகள், ஸ்ரீவாரி சேவா ஒதுக்கீடு விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். லக்கி டிப்பில் (குலுக்கல் முறை) ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான பதிவு 18-ம் தேதி காலை 10 மணியில் இருந்து 20-ந்தேதி காலை 10 மணி வரை நடக்கிறது. 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை இறுதி செய்ய வேண்டும்.

21-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். ஜூன் 19 முதல் 21 வரை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்க மார்ச் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 21-ந்தேதி மதியம் 3 மணிக்கு ஸ்ரீவாரி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவா டிக்கெட்டுகள், தரிசன டிக்கெட்டுகள் ஆகிய உற்சவள் சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். 25-ம் தேதி காலை 10 மணிக்கு, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். திருமலையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களுக்கான சேவை, திருப்பதி ஒதுக்கீடு 27-ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும். மேலே உள்ள அனைத்து ஆன்லைன் ஒதுக்கீட்டையும் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் பதிவு செய்யலாம். என்று கூறப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

13 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi