சென்னை:கிராம ஊராட்சிகளில் நாளை முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலம் பெறப்படும் என தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் கட்டணம் பெறுவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi