சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 12ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதுபோல, 500 மதுக்கடைகளும் கடந்த ஜூன் 22ம் தேதி மூடப்பட்டன. தமிழ்நாட்டில் இனி, இடமாற்றம் என்ற பெயரில் கூட புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.