சென்னை : தமிழகத்தில் மணல் குவாரி வழக்கின் விசாரணைக்கு ஏப்ரல் 25ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராக அவகாசம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.