சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மின்பளுவை குறைத்துக் கொள்ளவும் தேவைப்படும்போது உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படும். சூரியஒளி சக்தி மேற்கூரை மூலம் மின்னுற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.