சென்னை; தமிழ்நாட்டில் அடுத்த கேலோ இந்தியா போட்டி நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தேர்வு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. கேலோ இந்தியா போட்டியை தமிழக விளையாட்டுத்துறை சிறப்பாக நடத்தும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாக்கூருக்கும்அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.