சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் செயல்பாட்டுக்கு மதிமுக தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவே ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாகலாந்து மக்களால் திருப்பி அனுப்பப்பட்டவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என தெரிவித்தார்.