Monday, May 20, 2024
Home » தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்

by Mahaprabhu

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்ல காத்திருக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டும் நிகழ்வாக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் நடந்து முடிந்தது. அந்த வகையில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்தியேகமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் என்னென்ன உள்ளன? கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உயர்கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான உதவிகளும் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலும், நாளை திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 10-ந்தேதி செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், 11-ந்தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், 13-ந்தேதி ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

You may also like

Leave a Comment

15 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi