கும்பகோணம்: தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்துதான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள், ஆளுநர் ஆர்.என்.ரவி கூட பீகாரில் இருந்து வந்தவர்தான் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மாநில சுயாட்சிக்கு வந்துள்ள ஆபத்தை முதலமைச்சர் தலைமையிலான அரசு எதிர்கொண்டு வெற்றி பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.