சென்னை : தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.