Tuesday, May 28, 2024
Home » கண்டலேறு அணையில் இருந்து ஒரு டிஎம்சி கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு கிடைத்தது

கண்டலேறு அணையில் இருந்து ஒரு டிஎம்சி கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு கிடைத்தது

by Neethimaan

ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா, தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும் 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் தெலுங்கு, கங்கா ஒப்பந்தத்தின்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடலாம். இந்த நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த மே 1ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு முதலில் 500 கன அடியும் இதன்பின்னர் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாகவும் தற்போது 2450 கன அடியாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை – தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த 3ம் தேதி வந்தடைந்தது. கடந்த மே மாதம் 12ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் 375 கன அடி தண்ணீர் வந்தது. இதன் பிறகு கடந்த 15ம் தேதி 185 கன அடியாகவும் 17ம் தேதி 160 கன அடியாகவும் தண்ணீர் குறைந்தளவே வந்தது. ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் திருப்பிவிட்டதால் இந்த தண்ணீர் அளவு குறைந்தது. இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளிடம், ‘’தண்ணீர் குறைந்தளவு வருவதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில நாட்களுக்குமுன் விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

இதன்காரணமாக கடந்த வாரம் தண்ணீர் ஜீரோ பாயிண்டில் 340 கன அடியாகவும் நேற்று மழைநீருடன் சேர்த்து 562 கன அடியாகவும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மே 1ம் தேதி முதல் இதுவரை தமிழகத்துக்கு 1000 மில்லியன் கன அடி அதாவது 1 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi