சென்னை: தமிழ்நாட்டில் ஐபோன் தயாரித்துவரும் பெக்ட்ரான் தொழிற்சாலையை வாங்க டாடா குழுமம் பேச்சு நடத்துவதாக ராய்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. தைவானை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஆலையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே பெகட்ரானுடன் இணைந்து புதிய ஆலையை ஒசூரில் டாடா குழுமம் அமைக்கும் நிலையில் சென்னை ஆலையை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.