சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.