சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரியகுளத்தைச் சேர்ந்த சன்னாசி என்பவரின் வழக்கில் தேனி எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. பெரியகுளம் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஓபிஎஸ் நிறைவேற்றவில்லை என மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.