சென்னை: சென்னை தாம்பரம் அருகே தகுந்த கல்வி தகுதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் சம்பத் கைது செய்யப்பட்டார். என்.சி.ஹெல்த் கேர் என்ற பெயரில் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சோமங்கலம் போலீசார் சம்பத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.