வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாசில்தார் சம்பத், மணல் கடத்தல்காரர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு, லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் வாணியம்பாடி தாசில்தார் சம்பத்தை சஸ்பெண்ட் செய்து, திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.