சென்னை: தாட்கோ நிறுவன மேலாளர்களுக்காக புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ. 54 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், ரூ.314 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்பிடித் துறைமுகம், மீன் இறங்குதளம், மீன் வளர்ப்பு குளம், ஒருங்கிணைந்த அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.