கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடைபெற உள்ளது. கோடை விழாவை அடுத்து வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வனத்துறை, தோட்டக்கலைத் துறை, டான்டீ உள்ளிட்ட அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கோடை விழாவை இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கிறார்.