விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கருப்பு நிற சுடுமண் தோசை கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான இந்த சுடுமண் தோசை கல் சேதமடைந்த நிலையில் உள்ளது. தொடர்ந்து உணவு தயாரிக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு வருவதால் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது வரை இங்கு 2,800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.