சென்னை: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிக்கு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிக்க தயார் என பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 400 பேர் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து வரும் ஆபரேஷன் காவேரி மீட்பு பணிக்கு ஒத்துழைக்க தயார். மீட்பு பணியின்போது சூடானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.