Thursday, May 16, 2024
Home » பேராசிரியரை மிரட்டுவதற்காக கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்

பேராசிரியரை மிரட்டுவதற்காக கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்

by Ranjith

திருச்சி: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே கண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்றுமுன்தினம் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மேடை அருகே நின்றிருந்த பேராசிரியர் பவித்ரன், மேடைக்கு முன்பு இடையூறாக நின்று கொண்டிருந்த மூன்றாமாண்டு படிக்கு மாணவர் ஒருவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். அதை மதிக்காமல் மாணவர் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மாலை 4 மணியளவில் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற பேராசிரியர் முகிலனிடம், மது போதையில் வந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேராசிரியர், அந்த மாணவனின் ஐடி கார்டை வாங்கி வைத்துக்கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், மது பாட்டலில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு தனது சக நண்பர்களான அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் நேற்றுமுன்தினம் இரவு பைக்கில் வந்து வீசிவிட்டு சென்று உள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், பெட்ரோல் குண்டு வீசியது அதே கல்லூரியில் படித்து வரும் துறையூரை சேர்ந்த பவித்ரன் (22), கபிலன், (22), பிரதீஷ்(21), ஜீவா (20) ஆகியோர் என்பதும், இவர்கள் பேராசிரியரை மிரட்டுவதற்காக கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi