மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்கள் மகன் மௌனிஷ் (18), நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார், தங்கமணி (34). கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் கபீஷ் (17).
லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மௌனிஷ் மற்றும் கபீஷ் ஆகிய இருவரும் மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்டுப்புதூர் கருங்கரடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.