நாமக்கல்: நவம்பர்.9ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். காலாண்டு வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் வழக்கு பதிவு முறையை முறைப்படுத்தக்கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர். 9ம் தேதி நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 20 லட்சம் வாகனங்கள் பங்கேற்கின்றன.