Tuesday, April 30, 2024
Home » மன அழுத்தத்திற்கு குட்பை சொல்லுவோம்!

மன அழுத்தத்திற்கு குட்பை சொல்லுவோம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

அடுத்து என்ன நடக்கும் என்று சிந்தித்துதான் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நிலையில் நாம் ஏன் அதைப் பற்றி சிந்தித்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் நடப்பதை ரசித்து அனுபவித்து வாழ கற்றுக் கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்கவும், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ சில சிறந்த வழிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பதற்றமாகி மூலையில் அமர்ந்து கொண்டு அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள். சிலர் தங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளின் கல்வியை நினைத்து பதற்றமடைகிறார்கள். இப்படி எல்லாவற்றுக்கும் மன அழுத்தம் கொண்டால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது என்பதே உண்மையானதாகும் இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் முக்கியமான வழிகள் என்ன என்று பார்க்கலாம்.

இதற்கு என தனிப்பட்ட பயிற்சி மையங்கள் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களின் பணம் வீணாக செலவாகுமோ என்று சிந்தித்து அதற்கும் மன அழுத்தம் கொள்ள வேண்டாம். அதற்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான். உங்களின் பொன்னான நேரத்தில் ஒரு சில மணி நேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். எப்போது நீங்கள் உங்களுக்காக சிந்தித்து அதற்கு ஏற்ப செயல்படுகிறீர்களோ அந்த ெநாடியில் இருந்தே உங்களை விட்டு மன அழுத்தம் நீங்கிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்க செய்ய வேண்டியது இதுதான்…

அதிகம் சிந்திக்காதீர்கள்…

உங்கள் பதற்றத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணத்தை கண்டுபிடிக்க யோசித்தால், கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் உங்கள் நினைவுக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு வேலையை நினைத்து பதற்றம். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பை நினைத்து கவலை. மேல் படிப்பு படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற
சிந்தனை… இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சொல்லலாம். எனவே எந்த விஷயத்திற்கும் பதற்றம் அடையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதற்கான வழி தானாகவே உங்களுக்கு தென்படும். அதுவே உங்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.

மகிழ்ச்சியாக இருங்கள்…

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது சற்று கடினம்தான். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. உங்கள் சுற்றுப்புறத்தை அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது பல பிரச்னைகளை சரிசெய்யும்.

சண்டையை தவிர்த்திடுங்கள்…

சண்டை போடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. அதனால் சண்டை வருவதற்கான ஒவ்வொரு காரணத்தையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை சண்டை ஏற்பட்டால், அந்த நேரத்தில் மற்றவர்கள் மனம் புண்படும்படி வார்த்தையை விடாமல், நிதானமாக சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்…

பலரும் காலையில் எழுந்த உடனே முதலில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மன அழுத்தத்தை விரட்டுவது தான். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல ஆராய்ச்சிகளில், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலையும் மனதையும் முற்றிலும் அமைதியாக வைத்திருக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

பிடித்ததை செய்யுங்கள்…

சில நேரங்களில் நாம் சில வேலைகளை செய்த பிறகு நம்முடைய மனசு சந்தோஷமாக இருப்பதை நன்றாக உணர்வோம். அத்தகைய சூழ்நிலையில், மனதை நன்கு உணர வைக்கும் வேலைகளை நீங்கள் அடிக்கடி செய்யுங்கள். பிடித்த திரைப்படங்களை பார்த்து ரசியுங்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் என்றால், உங்களுக்கு பிடித்த உணவினை ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிடுங்கள். இது போல் பிடித்த விஷயங்களை செய்வதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

தொகுப்பு: பிரியா மோகன்

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi