புதுடெல்லி : பங்கு சந்தைகளில் ஐபிஓ முடிவடைந்த பின் பங்குகளை பட்டியலிடுவதற்கான காலக்கெடு தற்போது உள்ள 6 நாட்களில் இருந்து 3 நாளாக குறைப்பதற்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) பரிந்துரை செய்துள்ளது. பங்குகள் பட்டியலிடுவது மற்றும் பங்குகள் விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை குறைப்பது பங்குகளை வெளியிடுபவர்களுக்கும் அதில் முதலீடு செய்பவர்களுக்கும் மிகுந்த பயன் அளிக்கும். இந்த முடிவின் மூலம் பங்குகளை வெளியிட்டவர்களுக்கு விரைவான வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வழி ஏற்படுகிறது. அதே போல் முதலீட்டாளர்களும் முதலீடு செய்த தொகையை உடனே பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். பங்குகள் பட்டியலிடுவதற்கான காலக்கெடுவை குறைப்பது குறித்து வரும் ஜூன் 3ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என செபி தெரிவித்துள்ளது.