சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் நீதி வென்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். “நச்சு ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது” என வைகோ தெரிவித்துள்ளார்.